"வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மூலம் பிறரும் பாதிக்கப்படலாம்" என ஐசிஎம்ஆர் தகவல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1614

புதிய வகை வைரஸ் காய்ச்சலை கண்டு பதற்றம் அடையத் தேவையில்லை என்றும், வைரஸ் பாதித்தோர் 3 முதல் 4 நாள்கள், சுயதனிமைப்படுத்திக் கொண்டு, ஓய்வெடுத்தால் குணமாகி விட முடியும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறுகிறது. 

சென்னை சைதாப்பேட்டையில் முகாமை தொடங்கி வைத்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும், ஆனால் இதை கண்டு பயப்பட தேவையில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments